Saturday, September 21, 2013

ஸ்ரீ ராம ராம ராம


அவசரகதியில் செல்லும் நமது அன்றாட வாழ்வில் எளிதாக சொல்ல கூடிய மந்திரம் ஸ்ரீ ராம நாம மந்திரம்.
மிகுந்த பலனை அள்ளித் தரும் மந்திரமான இது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதது.நேரம் இடம் போன்றவற்றை கடந்து மனத்தாலும் உதட்டாலும் சொல்ல இடர்களை களையும் மந்திரம் இது.
எளியது வலியது நினைக்க நினைக்க இனியது ஸ்ரீ ராம மந்திரம்.

இதன் சிறப்பை ஸ்ரீபார்வதி தேவியே ஸ்ரீ பரமேஷ்வரனிடம் சஹஸ்ர நாமத்தை எளிய வழியில் சொல்லும் உபாயத்தை கேட்க ,ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்ரீராம நாமத்தை மூன்று முறை சொன்னாலே ஸ்ரீ சஹஸ்ர நாமத்தை சொன்னதற்கு ஈடானது என்றார்.
எனில்,இந்த நாமத்தின் மஹிமையை நாம் புரிந்து கொள்ளலலாம்.

ஸ்ரீ ராம ராம ராம

Tuesday, March 12, 2013

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம்




ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!