Tuesday, April 26, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா by MSS



மூதறிஞர் ராஜாஜி அவர்களிய 
குறை ஒன்றும் இல்லை 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

வேண்டியதை தந்திட வேங்கடேஸன் நின்றிருக்க 
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்  
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா 
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா  
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாகக்  கோயிலில் நிற்கின்றாய் கேசவா 
கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா 
யாரும் மறுக்காத மலையப்பா -உன் மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா  
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா 
கோவிந்தா கோவிந்தா  
கோவிந்தா கோவிந்தா  
கோவிந்தா கோவிந்தா